
தமிழகத்தில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருள்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதனால் குட்கா, பான் மசாலாவை ஒழிக்க காவல்துறையினர் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கான தடையை மேலும் அடுத்த ஆண்டு வரை அதாவது அடுத்த ஆண்டு மே மாதம் வரை நீடித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன் மீதான தடை கடந்த 2013-ல் தொடங்கப்பட்டு ஆண்டுதோறும் நீடிக்கப்பட்டு வருகிறது. இது போன்ற புகையிலை பொருள்கள் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்பதால் விநியோகம் செய்யவும், பதுக்கலுக்கான தடை மேலும் ஓர் ஆண்டுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி புகையிலை பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.