
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து 2004- ஆம் ஆண்டு சொத்து குவிப்பு வழக்கில் 27 கிலோ நகைகள் 1562 ஏக்கர் நிலப்பத்திரம் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என கர்நாடகா அரசுக்கு பெங்களூரு நகர நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது.
வருகிற பிப்ரவரி 14, 15 தேதிகளில் அந்த நகைகள் ஒப்படைக்கப்பட வேண்டும். அனைத்து பொருட்களும் மதிப்பீடு செய்து அனுப்ப வேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் 21 ஆண்டுகளுக்குப் பிறகு ஜெயலலிதாவின் நகைகள் மீண்டும் தமிழகத்திற்கு வரவுள்ளது