நாட்டிலேயே முதல் முறையாக 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற 1,761 அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதில், தமிழில் 100% மதிப்பெண் பெற்ற 43 மாணவ, மாணவிகளுக்கும் பாராட்டு தெரிவிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் விரைவில் இந்த விழா நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.