
புதுச்சேரி ரெட்டியார் பாளையத்தில் சாக்கடையில் இருந்து விஷ வாயு கசிந்ததில் மூதாட்டி உள்பட 3 பெண்கள் உயிரிழந்துள்ளனர். கழிவுநீர் தொட்டியில் இருந்து விஷ வாயு கழிவறைக்குள் பரவியதையடுத்து மயங்கி விழுந்த செந்தாமரை (72) என்ற மூதாட்டியைக் காப்பாற்றச் சென்ற அவரது மகளும் உயிரிழந்துள்ளார். அடுத்தடுத்து 3 பெண்கள் உயிரிழந்த நிலையில், அப்பகுதியினர் உடனடியாக வீட்டிலிருந்து வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.