சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதாவது, நிதி தரவில்லை என இனமானத்தை அடமானம் வைத்து வெகுமானம் பெரும் கொத்தடிமைகள் நாங்கள் அல்ல. இது பண பிரச்னை அல்ல இன பிரச்னை. இந்தியை ஏற்காவிட்டால் பணம் தர மாட்டோம் என்று மிரட்டினாலும். பணமே வேண்டாம் என தாய்மொழியை காப்போம்.

யார் எந்த மொழியை கற்பதிலும் தடையாக இருப்பதில்லை. தமிரை அழிக்கும் ஆதிக்க மொழி எதுவாக இருந்தாலும் அதை அனுமதிக்க முடியாது. 3வது மொழியை அனுமதித்தால், அது நம்மை மென்று தின்றுவிடும் என்று வரலாறு உணர்த்துகிறது என கூறியுள்ளார்.

மேலும் மாநில சுயாட்சியை உறுதி செய்து மனித உரிமைகளை நிலைநாட்டினால் தான் தமிழ் மொழியை காக்க முடியும். தமிழினத்தை உயர்த்த முடியும். இதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.