
தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் ஏற்கனவே திமுக வேட்பாளர்களை அறிவித்த நிலையில் தற்போது அதிமுக கட்சியில் துணை பொதுச்செயலாளர் கே.பி முனுசாமி மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து அறிவித்துள்ளார்.
அதன்படி மாநிலங்களவைத் தேர்தலில் அந்த கட்சியின் மூத்த தலைவர் இன்ப துரை மற்றும் முன்னாள் சபாநாயகர் தனபால் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். இந்த அறிவிப்பை அதிமுக அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிலையில் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது துணை பொதுச்செயலாளர் முனுசாமி தற்போதைக்கு அவர்களுக்கு சீட் ஒதுக்கப்படவில்லை. ஆனால் 2026 ஆம் ஆண்டு மாநிலங்களவை தேர்தலில் கண்டிப்பாக தேமுதிகவுக்கு ஒரு சீட் ஒதுக்கப்படும் என்று அறிவித்தார்.
மேலும் பிரேமலதா விஜயகாந்த் கண்டிப்பாக தேமுதிகவுக்கு ஒரு சீட் ஒதுக்கப்பட வேண்டும் அது அவர்களின் கடமை என்று கூறி வந்த நிலையில் அடுத்த வருடம் மாநிலங்களவைத் தேர்தலின் போது சீட் ஒதுக்கப்படும் என்று அதிமுக அறிவித்துள்ளது தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.