
மதுரை திமுக கட்சியின் மேயர் இந்திராணி. இவரது கணவர் பொன் வசந்த். இவரை தற்போது திமுக கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளனர். அதாவது வீடு கட்ட அனுமதி, அரசு பணிகள் ஒப்பந்தம், கடை அனுமதியென பல விஷயங்களில் பொன் வசந்த் மேயர் போல செயல்படுவதாக தலைமைக்கு அடிக்கடி புகார்கள் சென்றுள்ளது.
மதுரையில் விரைவில் திமுக கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் நிலையில் இவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கி உத்தரவிட்டுள்ளனர்.