மதுரை எம்பி சு. வெங்கடேசன். இவர் நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில மாநாடு கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்த நிலையில் மாலை டிஸ்டார்ஜ் செய்யப்படுவார் என்று கூறப்பட்டது. அவர் மருத்துவமனையில் உடல்நல குறைவினால் அனுமதிக்கப்பட்டதாக செய்தி வெளியான நிலையில் அவருக்கு என்ன பிரச்சனை என்ற தகவல் வெளிவரவில்லை.

இந்நிலையில் தற்போது வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. அவருக்கு நெஞ்சுவலி இருப்பதால் 6 மணி நேரத்திற்கு மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். அதாவது நேற்று மாநாட்டில் கலந்து கொண்ட போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும் அதனால்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்த தகவல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.