காவல்துறை முன்னாள் அதிகாரியான பொன் மாணிக்கவேலுக்கு சிலை கடத்தல் வழக்கில் உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. இந்நிலையில் தற்போது பொன் மாணிக்கவேலின் பாஸ்போர்ட்டை உச்சநீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அதன்பிறகு சிபிஐ விசாரணை தொடர்பாக சமூக ஊடகங்கள் மற்றும் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கவும் பொன் மாணிக்கவேலுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அதாவது பொன் மாணிக்கவேலின் ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என்று சிபிஐ தொடர்ந்த  வழக்கில் உச்சநீதிமன்றம் இவ்வாறாக கூறியுள்ளது. மேலும் இது தொடர்பாக 4 வாரங்களுக்குள் பொன் மாணிக்கவேல் பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.