
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தற்போது நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். நாடே எதிர்பார்த்த 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நிதி மந்திரி தாக்கல் செய்துள்ள நிலையில் தற்போது நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார். அவர் கூறியதாவது, இந்த பட்ஜெட் 10 அம்சங்களை அடிப்படையாகக் கொண்டது. இந்திய பொருளாதாரம் உலக அளவில் வேகமாக வளர்ந்து வருகிறது. உலக நாடுகள் இந்தியா மீது வைத்துள்ள நம்பிக்கை கடந்த 10 வருடங்களில் அதிக அளவில் உயர்ந்துள்ளது
.இந்நிலையில் புதிய வருமான வரிச் சட்ட மசோதா அடுத்த வாரம் முதல் அமல்படுத்தப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இதன் மூலம் கடந்த 1961 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள வருமானவரிச் சட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட இருக்கிறது.