தமிழ் சினிமாவில் நடிகையாகவும் பாடகியாகவும் இருந்த கொல்லங்குடி கருப்பாயி தற்போது மரணம் அடைந்தார். இவருக்கு வயது 98.‌ சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி பகுதியில் பிறந்தவர். இவர் ஆல் இந்தியா ரேடியோவில் சுமார் 30 வருடங்கள் பணிபுரிந்தார்.

இவர் நடிகர் பாண்டியராஜனின் ஆண்பாவம், ஆயிசு நூறு, கோபால கோபாலா உள்ளிட்ட படங்களில் பாட்டி வேடங்களில் நடித்துள்ளார். இவரது கலைத்திறமையை போற்றும் விதமாக தமிழக அரசு இவருக்கு கடந்த 1993 ஆம் ஆண்டு கலைமாமணி விருது வழங்கியது. மேலும் இவரது மறைவுக்கு தற்போது திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.