
பிரபல தொழிலதிபரும் மற்றும் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் ரத்தன் டாடா. இவருக்கு 86 வயது ஆகும் நிலையில் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மும்பையில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய ரத்த அழுத்தம் குறைந்ததால் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்படுகிறது.
அங்கு இருதய நோய் நிபுணரும் மருத்துவருமான ஷாருக் ஆஸ்பி தலைமையிலான மருத்துவ குழு அவரை கண்காணித்து வருகிறார்கள். மேலும் அவர் ஐஸ்யூவில் அனுமதிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.