
தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக இருப்பது ஆக்சிஸ் ஃபிலிம் ஃபேக்டரி. இதன் நிறுவனர் ஜி. டில்லிபாபு. இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான உறுமீன் திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். அதன் பிறகு ஓ மை கடவுளே, பேச்சுலர், இரவுக்கு ஆயிரம் கண்கள், ராட்சசன், மிரள், கள்வன், மரகத நாணயம் உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார்.
பல இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பளித்து அவர்களின் படங்களை தயாரித்தார். இவர் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் அவருடைய மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.