சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு நெடுஞ்சாலை துறை திட்டங்கள் குறித்து அறிவித்தார். அவை..

  • முதலமைச்சரின் அனைத்து பருவ காலங்களிலும் தங்கு தடையற்ற சாலை இணைப்புத் திட்டத்தின்கீழ், 84 தரைப்பாலங்கள், உயர்மட்டப் பாலங்களாக ரூ.466 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
  • முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், நடப்பாண்டில் 220 கி.மீ மாநில நெடுஞ்சாலைகளை நான்குவழிச் சாலையாகவும், 550 கி.மீ சாலைகளை இருவழிச் சாலையாகவும் ரூ.2,200 கோடி மதிப்பீட்டில் அகலப்படுத்தி மேம்படுத்தப்படும்’.
  • திருவான்மியூர் முதல் கொட்டிவாக்கம் வரையிலான கிழக்குக் கடற்கரைச் சாலை, ஆறு வழிச்சாலையாக ரூ.81 கோடி மதிப்பீட்டில் அகலப்படுத்தப்படும்.
  • சென்னை, பாடி அருகே “U’’ வடிவ சர்வீஸ் சாலை மற்றும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள திருவான்மியூர்-கொட்டிவாக்கம் வரை உள்ள சாலையை அகலப்படுப்படுத்த ரூ.95 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
  • தூத்துக்குடி-வாஞ்சி மணியாச்சி, ராசிபுரம் பேருந்து நிலையம் மற்றும் முட்டம் பாலம் ஆகிய இணைப்புச் சாலைகள் ரூ.230 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
  • ராஜ கீழ்ப்பாக்கத்தில் இருந்து அகரம் தென் வழியாக பெருங்களத்தூர் மார்க்கத்தில் 1400மீ நீளத்திற்கு தாம்பரம் கிழக்குப் புறவழிச்சாலை ரூ.25 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
  • வில்லிவாக்கம் ரயில்வே மேம்பாலத்தின் அடியில் கொரட்டூர் மற்றும் பாடி மார்க்கமாக செல்ல ”U” வடிவ சர்வீஸ் சாலை ரூ.14 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்”