த.மா.க கட்சியின் முன்னாள் எம்எல்ஏ புரட்சிமணி உடல்நலக் குறைவின் காரணமாக நேற்று காலமானார். இவருக்கு வயது 59. ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கடலூர் தெற்கு மாவட்ட தலைவராக இருந்த புரட்சிமணி கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மரணமடைந்தார்.

அவரது உடலுக்கு பலரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் இவரது இறுதிச் சடங்கு இன்று பொன்னாடை மாலை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.