தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் சாஹிப் இன்று காலமானார். இவருக்கு 84 வயது ஆகிறது. இவர் வயது மூப்பின் காரணமாக மரணமடைந்ததாக தகவல் வெளிவந்துள்ளது. இவரது மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் தேதியை அறிவிப்பது தமிழகத்தின் தலைமை காஜி என்பது குறிப்பிடத்தக்கதாகும்.