
வங்க கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்ற நிலையில் அது தமிழகம் நோக்கி நகர்ந்து வருவதால் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. இதன் காரணமாக இன்று புதுச்சேரியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்பிறகு தமிழகத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி முன்னதாக 12 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக 4 மாவட்டத்திற்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அதாவது காஞ்சிபுரம், திருவாரூர், ராமநாதபுரம், திண்டுக்கல், கடலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, விழுப்புரம், சென்னை, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று தற்போது செங்கல்பட்டு, திருவண்ணாமலை மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று தொடக்கப் பள்ளிகளுக்கு அதாவது 1 முதல் 5 வரையிலான பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.