உலகம் முழுவதும் பெரும் மக்கள் பயன்படுத்தும் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டான சாட்ஜிபிடி (ChatGPT) திடீரென முடங்கியதால் பயனர்கள் அவதிய உள்ளாகியுள்ளனர்.

இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து “சாட்ஜிபிடி வேலை செய்யவில்லை”, “சர்வர் எரர்” என புகார்கள் எழுந்துள்ளன. தினமும் உலகம் முழுவதும் சுமார் 10 கோடி பயனர்கள் பயன்படுத்தும் இந்த தொழில்நுட்ப சேவை தற்காலிகமாக முடங்கியதால் சமூக வலைதளங்களில் இது தொடர்பான கருத்துகள் பரவலாக வெளியாகி வருகின்றன.

“>

 

பல நெட்டிசன்கள் “ChatGPT டீ பிரேக் எடுக்க சென்றுவிட்டது போல இருக்கே” என மீம்ஸ் மற்றும் கிண்டல் கருத்துகளையும் பகிர்ந்து வருகின்றனர். OpenAI நிறுவனம் இதுகுறித்த பிரச்சனையை கண்டறிந்து விரைவில் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.