அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ் மணியன். இவர் இன்று நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தார். அதாவது அவர் வேதாரணியத்தில் இருந்து கீழ்வேளூர் பகுதியில் நடைபெறும் செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றார்.

அப்போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து பெரியாச்சி கோவில் சுற்றுச்சுவர் போது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர் காயமடைந்த நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் ஓ எஸ் மணியன் நல்வாய்ப்பாக காயங்கள் இன்றி உயிர்த்தப்பினார்.