
அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சரும் ஆரணி எம்எல்ஏவும் ஆன சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் தற்போது லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இவருடைய மகன்கள் ஆன விஜயகுமார் மற்றும் சந்தோஷ்குமார் ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடைபெறுகிறது.
இதேபோன்று தற்போது அதிமுக கட்சியின் முன்னாள் எம்எல்ஏ நீதிபதி அவர்களின் வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது. மதுரை உசிலம்பட்டியில் உள்ள நீதிபதி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்
. இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை உசிலம்பட்டி எம்எல்ஏவாக இருந்தபோது வருமானத்திற்கு அதிமுக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்ததன் அடிப்படையில் சோதனை நடைபெறுகிறது. மேலும் அடுத்தடுத்து அதிமுக முக்கிய பள்ளிகள் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொள்வது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.