
வங்க கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து கொண்டிருக்கிறது. இன்று மாலைக்குள் அது புயலாக வலுப்பெற்று நாளை காலைக்குள் கரையை கடக்கும் என கூறியிருந்தனர்..
புயல் கரையை கடக்கும் போது தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் அதிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த நிலையில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் அறிவித்துள்ளது. சற்று ,முன் வங்க கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுபெற்றது.