தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு மார்ச் 3ஆம் தேதி முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடைபெறுகிறது. அதன்படி இன்று முதல் பிப்ரவரி 14ஆம் தேதி வரை செய்முறை தேர்வு நடைபெறும் நிலையில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 15ஆம் தேதி முதல் பிப்ரவரி 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதேபோன்று 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் பிப்ரவரி 28ஆம் தேதி வரை செய்முறை தேர்வுகள் நடைபெறுகிறது.

இன்று 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடைபெறுவதை முன்னிட்டு தற்போது தமிழக மின்சார வாரியம் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி அனைத்து தேர்வு மையங்களிலும் தடையற்ற மின்சாரம் வழங்குவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை செய்யக்கூடாது எனவும் மாணவர்கள் படிப்பதற்காக இரவு நேரங்களிலும் தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.