
அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 104 இந்தியர்களுக்கு கை, கால்களில் விலங்கு போடப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தது. இது குறித்து வெளியுறவுத் துறை விளக்கம் அளிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டதால் நாடாளுமன்றம் முடங்கியது. இந்த நிலையில் அமெரிக்க எல்லை பாதுகாப்பு படை இந்தியர்களின் கை கால்களில் விலங்கு போடப்பட்டதை உறுதி செய்யும் விதமாக வீடியோவை வெளியிட்டது .
சட்டவிரோதமாக குடியேறியவர்களை தொலைதூர நாடான இந்தியாவுக்கு ராணுவ விமானம் மூலம் அனுப்பி வைத்ததாக எல்லை பாதுகாப்பு படை தலைவர் மைக்கேல் பெருமிதமாக கூறியுள்ளார். இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.