
தமிழகத்தில் தற்போது 4.83% மின் கட்டணத்தை உயர்த்தி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த நடைமுறை ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ளது என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதில் வீட்டு பயன்பாடு, அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் உள்ள குடிசைகள், வழிபாட்டுதலங்கள்,கைத்தறி, சிறு, குறு தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்களுக்கான மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி 0 to 400 யூனிட் பயன்பாட்டுக்கான மின் கட்டணம் ₹4.60ல் இருந்து 4.80ஆக உயர்வு.
1; 401 to 500 யூனிட் பயன்படுத்தினால் கட்டணம் ₹6.15ல் இருந்து ₹6.45ஆகவும்
2; 501 to 600 யூனிட் பயன்படுத்தினால் கட்டணம் ₹8.15ல் இருந்து ₹8.55ஆகவும்
3; 601 to 800 யூனிட் பயன்படுத்தினால் கட்டணம் ₹9.20ல் இருந்து ₹9.65ஆகவும் .
4; 801 to 1000 யூனிட் பயன்பாட்டுக்கான கட்டணம் ₹10.20ல் இருந்து ₹10.70ஆகவும் உயர்ந்துள்ளது
5; மேலும் 1000 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு இனி ₹11.80 வசூலிக்கப்படும்.
இந்த மின்கட்டண உயர்வு ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.