அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 5 பேர் மீதான வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 5 பேர் உள்ளிட்ட 11 பேருக்கு எதிரான வழக்கை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம். முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், கே பி முனுசாமி மீதான வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுத்தியதாகவும் தொடரப்பட்ட வழக்கில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அரசுக்கு எதிராக கரூர் வேலுசாமிபுரத்தில் 2023 இல் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. அரசியல் பழி வாங்கும் நடவடிக்கையாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. கரூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்ய கோரி 11 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.