புஷ்பா 2 பட ரிலீஸ் சமயத்தில் ஒரு பெண் கூட்டணி சிக்கி உயிரிழந்தார். அந்தப் பெண்ணின் மகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்ட தற்போது ஜாமினில் வெளியே உள்ளார். இந்த நிலையில் திரையரங்க கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்து சிகிச்சை பெரும் சிறுவனை பார்க்க மருத்துவமனை செல்ல நடிகர் அல்லு அர்ஜுன் அனுமதி கேட்டார்.

இதற்கு பதிலளிக்க ஹைதராபாத் போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் போலீசார் பாதுகாப்புடன் சிறுவனை சந்திக்க ஏற்பாடுகள் செய்யப்படும். ஒத்துழைக்க மறுத்தால் அங்கே ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அதற்கு நீங்கள் தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என போலீசார் கூறியுள்ளனர்.