
குஜராத் மாநிலம் அகமதாபாத் ஏர்போர்ட்டிலிருந்து நேற்று லண்டன் புறப்பட்ட விமானம் சில நிமிடங்களில் ஒரு மருத்துவக் கல்லூரி விடுதியின் மேல் விழுந்து வெடித்து சிதறியது. இந்த விபத்தில் 242 பேர் பயணம் செய்த நிலையில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்த நிலையில் 241 பேர் உயிரிழந்தனர்.
அதன்பிறகு கல்லூரி மருத்துவ கட்டிடத்தின் மேல் விழுந்ததால் அங்கிருந்தவர்களும் உயர்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஏற்கனவே ஏர் இந்தியா நிறுவனம் 241 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில் கல்லூரி விடுதியில் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்ற விவரம் வெளிவரவில்லை.
இந்த விமானம் கிளம்பிய 30 நொடிகளில் கீழே விழுந்து வெடித்து சிதறிய நிலையில் இதற்கு பயங்கரவாத சதி திட்டங்கள் காரணமாக இருக்கலாம் என்ற தகவல்கள் பரவியது. ஆனால் இதனை தற்போது மத்திய அரசு மறுத்துள்ளது. அதாவது இதில் சதித்திட்டங்கள் நடந்ததற்கான முகாந்திரங்கள் இல்லை என மத்திய அரசு தரப்பு கூறியுள்ளது.
மேலும் அகமதாபாத் காவலர்களின் விசாரணைக்கு உதவி செய்வதற்காக என்ஐஏ உள்ளிட்ட விசாரணை அமைப்புகளும் களத்தில் இறங்கியுள்ளது. மேலும் கருப்புபெட்டி கிடைத்தால் தான் விபத்துக்கான உண்மை காரணம் தெரியவரும் என்பதால் அது கிடைத்த பிறகு இது குறித்த முழுமையான தகவல்கள் தெரியவரும் என்று கூறப்படுகிறது.