
குஜராத் மாநிலம் அகமதாபாத் ஏர்போர்ட்டில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் 10 நிமிடங்களில் வெடித்து சிதறியது. இது ஒரு மெடிக்கல் கல்லூரி விடுதியின் மேல் விழுந்த நிலையில் ஏராளமான மருத்துவ மாணவர்களும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்த விமானத்தில் 242 பேர் பயணம் செய்த நிலையில் அனைவருமே உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து கண்டறிய கருப்பு பெட்டியை தேடும் பணிகள் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் தற்போது டாடா குடும்பம் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
மேலும் காயமடைந்தவர்களின் மருத்துவ செலவுகளை ஏற்பதாக அறிவித்ததோடு, சோதனை விடுதி கல்லூரியை கட்டி தருவதாகவும் அறிவித்துள்ளது.