தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் புஷ்பா 2 திரைப்படம் வெளிவந்த ஆயிரம் கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்த நிலையில் இந்த படத்தின் பிரீமியர் ஷோ நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்ட போது நடிகர் அல்லு அர்ஜுன் வருகை புரிந்தார். அப்போது ரசிகர்களின் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில் போலீசார் தடியடி நடத்தினார்கள். இதில் கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற 35 வயது பெண் உயிரிழந்தார். அவர் குடும்பத்தினருடன் நடிகர் அல்லு அர்ஜூனை காண சென்ற நிலையில் அவருடைய மகன் இன்னும் சிகிச்சையில் தான் இருக்கிறார்.
இது தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜுன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. சொன்னதாக உயிரிழந்த ரசிகையின் குடும்பத்தினருக்கு நடிகர் அல்லு அர்ஜுன் 25 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கினார். இந்த நிலையில் இன்று நடிகர் அல்லு அர்ஜுனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் தற்போது அவருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விடுத்து நீதிமன்ற முத்தரவிட்டுள்ளது. மேலும் நடிகர் அல்லு அர்ஜுன் எஃப்ஐஆர்-ஐ ரத்து செய்ய கோரியதோடு கைது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்குமாறு மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.