
ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் இந்திய பூர்வீகத்தைக் கொண்ட பாலேஷ் தன்கர் என்பவர் பாஜக கட்சியின் வெளிநாட்டு நண்பர் பிரிவு முன்னாள் தலைவராக இருந்தவர். இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் வேலைக்கு விண்ணப்பித்திருந்த 5 கொரிய பெண்களை வரவழைத்து போதைப் பொருள் கலந்து கொடுத்து மயக்கமாக்கி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அவர் பெண்களுடன் நெருக்கமாக இருந்ததை வீடியோவாக எடுத்து மிரட்டுவதாகவும் இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
அதன்படி கடந்த வருடம் அவர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது அவருக்கு நீதிமன்றம் 40 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் விசாரணையின் முடிவில் அவர் மீதான குற்றம் உறுதியானதால் அவருக்கு 40 வருடங்கள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.