
பக்ரீத் பண்டிகை வருகிற 7-ம் தேதி அதாவது இன்று கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை காஜி முகமது அக்பர் அறிவித்திருந்தார். தமிழகத்தில் சென்னை உட்பட பல இடங்களில் இன்று துல்ஹஜ் மாதத்தின் பிறை நிலவு தென்பட்டதை அடுத்து பக்ரீத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய பண்டிகைகளில் மிகவும் முக்கியமானது இந்த பக்ரீத் பண்டிகை. பொதுவாக துல்ஹஜ் மாதத்தின் 10-வது நாளில் இந்த பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இன்று பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு புதுக்கோட்டை ஈத்கா பள்ளிவாசலில் ஏராளமான இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து ஒருவரை ஒருவர் கட்டியணைத்து தொழுகையில் ஈடுபட்டனர்.