தென்கொரியாவில் இன்று 26 ஆவது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தொடங்கியது. இப்போட்டி வருகிற மே 31ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 43 நாடுகளைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று உள்ளனர். இந்த தொடருக்காக 61 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 9 வீரர்கள் தமிழ நாட்டைச் சேர்ந்தவர்கள். இந்நிலையில் போட்டியின் முதல் போட்டியாக ஆடவருக்கான 20 மீட்டர் நடைப்போட்டி நடைபெற்றது. இதில் தமிழக வீரர் செர்வின் செபாஸ்டியன் மற்றும் அமீத் ஆகிய இரு இந்திய வீரர்கள் பங்கேற்றனர்.

இந்நிலையில் போட்டியில் பங்கேற்று பதக்கங்களை வென்ற தமிழக வீரர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது எங்கள் SDAT- ன் ELITE விளையாட்டு வீரர்கள் பதக்கம் வென்றத்தில் நாங்கள் மகழ்ச்சியடைகிறோம். தடகளத்தை மேம்படுத்துவதற்காக தமிழக அரசு மேற்கொண்ட முயற்சிகள் சர்வதேச அரங்கில் சிறந்த முடிவுகளை தருகின்றனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.