
மலேசியாவில் நடைபெற்ற எய்ஷியன் ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி தற்போது ஒரு சமூக ஊடக சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது. அதாவது பாகிஸ்தானைச் சேர்ந்த மேவிஷ் அலி (Mehwish Ali) என்ற வீராங்கனை, போட்டி முடிவில் தனது எதிரணியான ஹாங் காங்கின் சங் ஒய் எல் (Chung Y L) என்பவரை நோக்கி மிடில் ஃபிங்கர் காட்டிய செயலால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இந்த சம்பவம், அண்மையில் நடைபெற்ற யு-17 (Under-17) பிரிவு போட்டியின் Round of 16 சுற்றில் நடந்தது. மேவிஷ் அலி, சங் ஒய் எலுடன் போட்டியிட்டதில், குவிகமான ஆட்டத்திற்குப் பிறகு பாகிஸ்தான் வீராங்கனை 13-11, 5-11, 11-13, 4-11 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார். போட்டி முடிந்ததும் மேவிஷ், எதிரணி வீராங்கனையை நோக்கி ‘மத்திய விரலை’ (middle finger) காட்டினார்.
Pakistani squash player Mehwish Ali displaying a middle finger to her opponent after losing a match is inappropriate and unacceptable. This behavior is unsportsmanlike and she should be issued a fine or penalty. Mehwish should also reflect on her actions and apologize. pic.twitter.com/ADmGYnIMQO
— Muneeb Farrukh (@Muneeb313_) July 3, 2025
இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி பல்வேறு தரப்பினரின் கண்டனங்களை உருவாக்கியுள்ளது. குற்றச்சாட்டுகள், ஆளில்லா நடத்தை, விளையாட்டு ஒழுக்கம் மீறல் என பாகிஸ்தான் வீராங்கனையின் செயல் தொடர்பாக ஆசிய ஸ்குவாஷ் சம்மேளனத்திடம் புகார்கள் எழுந்துள்ளன. மேவிஷின் இந்த செயல், இளம் வீரர்களிடையே எதிர்மறையான மாதிரியாக பார்க்கப்படுகிறது எனவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேவிஷ் அலிக்கு எதிராக விளையாட்டு ஒழுக்க நெறிமுறைகளை மீறியதாக, போட்டி அமைப்பாளர்கள் விசாரணை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஒரு போட்டியில் வெற்றி அல்லது தோல்வியை ஏற்றுக்கொள்வது ஒரு வீரரின் அடிப்படை மனநிலையாக இருக்க வேண்டும் என்றும், மேவிஷின் நடவடிக்கை, பாகிஸ்தான் அணியின் மதிப்பை பாதித்துள்ளது என்றும் விமர்சனங்கள் வலுத்து வருகின்றன.
இதுபோன்ற நிகழ்வுகள், விளையாட்டு ஆளுமையின் மரியாதையையும், போட்டி ஒழுக்கத்தையும் கேள்விக்குள்ளாக்குகின்றன என்பதே சமூக ஊடகங்களின் கருத்தாகும்.