டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் சுப்ரீம் கோர்ட் அவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டதால் சிறையில் இருந்து விடுதலை ஆனார். இதைத்தொடர்ந்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்த நிலையில் தற்போது டெல்லியின் துணைநிலை ஆளுநரை சந்தித்து தற்போது தன்னுடைய ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டார்.

இதைத்தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள அதிஷிக்கு எம்எல்ஏக்கள் கொடுத்த ஆதரவு கடிதத்தை வழங்கி புதிய அரசு அமைக்க அனுமதி கேட்டுள்ளார். டெல்லியில் அடுத்த சட்டமன்ற தேர்தல் வரும்வரை அதிஷி முதல்வராக தொடர்வார் என அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டெல்லியில் 3-வதாக பதவி ஏற்கும் பெண் முதல்வர் என்ற பெருமையை அதிஷி பெற்றுள்ளார்.