நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகர்கள் போதைப் பொருள் பயன்படுத்தியது குறித்த கேள்விக்கு செய்தியாளர்களுக்கு பதிலளித்துள்ளார்.

அந்தப் பேட்டியில் அவர் கூறியதாவது, என் பொண்டாட்டி நடிகர் ஸ்ரீகாந்த், நடிகர் கிருஷ்ணா தவிர வேறு யாரும் போதைப் பொருள்களை பயன்படுத்தவில்லையா? இந்தியா முழுவதும் போதைப்பொருள் வேரூன்றி உள்ளது.

அதுவே இன்று கலாச்சாரமாக மாறி வருகிறது. மும்பையில் அதானியின் துறைமுகத்தில் ரூபாய் 20 லட்சம் கோடிக்கு மேல் போதை பொருள்கள் கப்பலில் கொண்டுவரப்பட்டது அனைவருக்கும் தெரியும்.

ஆனால் அந்தக் கப்பலை திருப்பி அனுப்பினீர்களா? அந்த போதை பொருள்களை என்ன செய்தீர்கள்? என நான் ஒருவன் மட்டும்தான் கேள்வி கேட்டேன். போதைப்பொருள் பயன்படுத்திய இரு நடிகர்களை கைது செய்தீர்கள், சரி விற்றவனை கைது செய்தீர்களா?.

சந்தன கடத்தல் வீரப்பன், யானை தந்தம் கடத்தல், கடத்தல் காரர்கள் என கூறுகிறீர்கள். விற்றவர்களை கைது செய்ய முயற்சித்தீர்கள், வாங்கினவர்கள் எங்கு? அவர்களை கைது செய்து இருக்கிறீர்களா?.

நடிகர் இருவரும் குற்றவாளிகளா? ஸ்ரீகாந்துக்கு போதைப்பொருள் விற்றவர் அதிமுக நிர்வாகி என்பதால் இதை திருப்ப பார்க்கிறீர்கள். அப்போ திமுகவிற்கும் போதை பொருளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாதா? போதைப் பொருள் தமிழகத்தில் எப்படி புழங்குகிறது. அதன் வேரை வெட்டுங்கள். இலையையும், கிளையையும் வெட்டி என்ன பயன்? இவ்வாறு கூறினார்.