
உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்று ஆப்பிள். இது தனது ஸ்மார்ட் போன் சீரிஸ் 16, கம்ப்யூட்டர், ஐஃபோன்கள், ஸ்மார்ட் வாட்ச்கள் ஆகியவற்றை ஆண்டுதோறும் செப்டம்பரில் அறிமுகம் செய்வது வழக்கம். கடந்த சில தினங்களுக்கு முன்பு AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய ஐபோன் 16 மாடல்கள் மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய 10 மாடல் ஸ்மார்ட் வாட்ச்சை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புதான் ஆப்பிள் இந்தியாவில் உற்பத்தியை தொடங்கியது.
இங்கு விற்பனை உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் ஆப்பிள் நிறுவனத்திற்கு ஏற்றவாறு உள்ளது. இதனால் புதிதாக அறிமுகம் செய்துள்ள ஐபோன் 16 மாடல் உற்பத்தியை இந்தியாவிலேயே மேற்கொள்ள ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஆப்பிள் இந்தியாவில் 1.5 கோடி ஐபோன்களை உற்பத்தி செய்தது. கடந்த 2013ஆம் ஆண்டு 2.5 கோடியாக ஐபோன்களில் உற்பத்தி உயர்ந்தது. அதன் விளைவாக இந்த ஆண்டில் முதல் 6 வாரங்களில் சீனாவில் ஐபோன் உற்பத்தி 24 சதவீதம் குறைந்த இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.