
காந்தாரா படத்தின் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக 2-வது பாகம் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அதன்படி தற்போது கர்நாடகா மாநிலம் ஷிவமோகா மாவட்டத்தில் உள்ள மணி நீர்த்தேக்கத்தில் படபிடிப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படகு ஒன்று கவர்ந்து விபத்து கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த படகில் நடிகர் இயக்குனர் ரிஷப் செட்டி உட்பட முப்பதுக்கு மேற்பட்ட படக்குழு உறுப்பினர்கள் இருந்தனர். இந்த விபத்து மஸ்தி கட்டே பகுதியில் கொப்பா என்ற இடத்தில் ஆழமற்ற நீர் பகுதியில் நிகழ்ந்தது. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. ரிஷப் செட்டி உள்ளிட்ட அனைவரும் பத்திரமாக நீந்தி கரைக்கு வந்தனர். ஆனால் கேமரா உள்ளிட்ட படபிடிப்பு உபகரங்கள் நீரில் சேதம் அடைந்தது. இந்நிலையில் இந்த விபத்து குறித்து விளக்கம் கேட்டு அந்த படக்குழுவினருக்கு மாவட்ட கலெக்டர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.