
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பிற்பகல் 4 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த நிலையில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருப்பூர் மயிலாடுதுறை, கடலூர், தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி ஆகிய 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.