பிரேமம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் சாய் பல்லவி. இவர் அந்த படத்தில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார். இவருக்கு முதல் படத்திலேயே சிறந்த நடிகை என்ற பெயர் கிடைத்தது. இதனால் தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடக்க வாய்ப்புகள் கிடைத்தது. இவர் கடந்த 2018ம் ஆண்டு ஹனு ராகவபுடி இயக்கத்தில் வெளியான ‘பாடி பாடி லெச்சே மனசு’ என்ற படத்தில் நடித்திருந்தார். ஆனால் இந்த படத்தில் வெறும் 8 கோடி மட்டுமே வசூலித்து தோல்வி அடைந்தது.

இதனால் சாய் பல்லவி தான் கையெழுத்து இடும்போது வாங்கிய பணத்தைத் தவிர பாக்கி பணத்தை வாங்க மறுத்திருக்கிறார். அதாவது அவர் மீதமுள்ள 40 லட்சம் ரூபாயை வாங்க மறுத்து இருப்பதாக கூறப்படுகிறது. இவர் சமீபத்தில் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து அமரன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது சைதன்யாவுடன் ‘தண்டேல்’ என்ற படத்தில், பாலிவுடில் ராமாயணம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.