மகாராஷ்டிரா மாநிலத்தில் போரிவலி ரயில் நிலையம் உள்ளது. அங்கு வந்த ரயில் ஒன்று மீண்டும் புறப்பட்டபோது ரயிலில் இருந்து பெண் ஒருவர் இறங்க முயற்சி செய்துள்ளார். அப்போது அவர் தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ரயில்வே பாதுகாப்பு காவல்துறை அதிகாரி விரைவாக ஓடிச் சென்று பெண்ணை காப்பாற்றினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இதையடுத்து ஓடும் ரயிலில் ஏறவோ, இறங்கவோ முயற்சிக்காதீர்கள் என்று இந்திய ரயில்வே எச்சரித்துள்ளது.