
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மீரட்டில் 12ஆம் வகுப்பு மாணவி ஆஸ்தா கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாத்ரி கிராமத்தைச் சேர்ந்த 17 வயது பெண் ஆஸ்தா. அவரை அவரது தயார் கழுத்தை நெரித்துக் கொலை செய்தாக கூறப்படுகிறது.
பின்னர், அவரது தாய், தாய்வழி மாமாக்கள் மற்றும் உறவினருடன் சேர்ந்து மாணவியின் உடலை துண்டித்து, உடற்பகுதியை வடிகாலில், தலையை கால்வாயில் வீசியுள்ளனர். தற்போது தலையை போலீசார் தேடி வருகின்றனர்.
மாணவியின் உடலை அடையாளம் காண முடியாத சூழ்நிலையில், அவர் அணிந்திருந்த சல்வாரில் இருந்த ஒரு கைத்தொலைபேசி எண் காகிதம் வழியாக போலீசாருக்கு முக்கிய தகவல் கிடைத்தது. அந்த எண்ணை தொடர்புகொண்ட போலீசாருக்கு, ஆஸ்தாவைத் தெரிந்த ஒரு நண்பர் உடலை அடையாளம் காட்டினார்.
அதன்பின்னரே, கொலையில் அவளது குடும்பமே ஈடுபட்டுள்ளது என்பது தெரியவந்தது. மாணவியின் தந்தை ரமேஷ், CRPF-ல் பணியில் சத்தீஸ்கரில் இருந்த நிலையில், இவ்வாறு கொடூர சம்பவம் நடந்துள்ளது.
காவல் துறையினர் தற்போது தாய், இரண்டு தாய் மாமாக்கள் மற்றும் மற்றொரு உறவினரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களில் ஒருவர் மஞ்சீத் என்ற மோனு, மாணவியின் தலையை வீசிய இடம் குறித்த தகவலை போலீசாருக்கு வழங்கியுள்ளார்.
அதன்பேரில், ஜானி கங்கா கால்வாயில் போலீசார் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். மேலும் இது தொடர்பான தேடுதல் SP சிட்டி மற்றும் ASP பிரம்மபுரி ஆகியோர் கண்காணிப்பில் நடைபெறுகிறது.
அரசு பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த ஆஸ்தா, தனது குடும்பத்தில் மூத்த மகளாக இருந்தார். அவருக்கு 14 மற்றும் 11 வயதுள்ள இரண்டு தம்பிகள் உள்ளனர். போலீசார் மாணவியின் தந்தையின் CDR பதிவு, அவரது தொடர்புகள், குடும்ப உறவினர்களின் சிடிஆர் பதிவுகள் ஆகியவற்றை ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் கொலை குறித்த விசாரணையில், மாணவி ஒரு டீனேஜர் நண்பருடன் நெருங்கிய நட்பு வைத்திருந்ததால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து குடும்பமே இந்த கொடூர நடவடிக்கையில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.இசசம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.