மராட்டிய மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்தில் அம்பர்நாத் தாலுகா குஷிவ்லி கிராமத்தை சேர்ந்த  விவசாயி ஒருவர் சம்பவ நாளன்று  தனது நிலத்தில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்று உள்ளார். அப்போது நிலத்திற்கு அருகே உள்ள மரத்தில் ஒரு ஆணும், ஒரு பெண்ணும் தூக்கில் தொங்கிய நிலையில் கடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் இது குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்தார். அந்தத் தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் இருவரின் உடல்களையும் மீட்டு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில், தூக்கில் தொங்கிய இருவரும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர். அவர்கள் இருவருமே சின்ஞ்பாடா பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். கடந்த புதன்கிழமை வழக்கம்போல வேலை முடிந்து இருவரும் வேலை பார்க்கும் இடத்திலிருந்து வெளியேறி உள்ளனர். ஆனால் வீட்டிற்கு செல்லவில்லை.

நீண்ட நேரம் ஆகியும் இருவரையும் காணாததால் அவர்களது குடும்பத்தினர் அக்கம் பக்கம் உள்ள பகுதிகளில் தேடிப் பார்த்துள்ளனர். கண்டுபிடிக்க முடியவில்லை அதன் பின் அவர்கள் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்பட்டதாவது, இருவரும் காதலர்கள் இவர்களது காதலை இரு விட்டாலும் ஒத்துக்கொண்டு ஒரு வருடம் கழித்து திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளனர்.

இந்த நிலையில் இருவரும் மரத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளனர். மேலும் சம்பவ இடத்தில் தற்கொலைக்கான எந்த ஒரு குறிப்பு இல்லை. இது குறித்து இருவரின் உறவினர்கள் மற்றும் வேலை பார்க்கும் இடங்களில் உள்ள ஊழியர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் இருவரின் செல்போன்களையும் ஆய்வு செய்து வருகிறோம். அவர்கள் இருவரும் தற்கொலை தான் செய்து கொண்டனரா? அல்லது கொலை செய்யப்பட்டுள்ளரா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது என காவல்துறையினர் கூறியுள்ளனர்.