ஜோதிட சாஸ்திரத்தின்படி மிக முக்கியமான கிரகப் பெயர்ச்சியாகக் கருதப்படும் ராகுவின் நட்சத்திர மாற்றம் வரவிருக்கும் ஆகஸ்ட் 2, 2026 அன்று நிகழவுள்ளது. அன்றைய தினம் ராகு பகவான் செவ்வாயின் ‘அவிட்டம்’ நட்சத்திரத்திற்குப் பெயர்ச்சியாகிறார். செவ்வாயின் நட்சத்திரத்தில் ராகு பிரவேசிப்பது சில ராசியினருக்கு நிதி நெருக்கடி, தொழில் இழப்பு மற்றும் மன உளைச்சல் போன்ற சவால்களை உருவாக்கக்கூடும் என்பதால், குறிப்பாக 3 ராசியினருக்கு எச்சரிக்கை தேவை என ஜோதிட வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

1. ரிஷபம்:

ரிஷப ராசியினருக்கு இந்த நட்சத்திரப் பெயர்ச்சி கடுமையான மன அழுத்தத்தைத் தரக்கூடும். நிதி நிலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்படும் என்பதால், புதிய முதலீடுகள் மற்றும் புதிய தொழில்களைத் தொடங்குவதைத் தவிர்ப்பது நல்லது. வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களுடன் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. வாகனங்களை இயக்கும்போது கவனமாக இருக்க வேண்டும்; அவசரப்பட்டு முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.

2. கன்னி:

கன்னி ராசியினருக்குக் குடும்பத்திலும் பணிச்சூழலிலும் பிரச்சனைகள் தலைதூக்கலாம். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடுகளும், காதல் வாழ்க்கையில் தேவையற்ற சந்தேகங்களால் மனக்கசப்பும் ஏற்படக்கூடும். கூட்டுத் தொழிலில் ஈடுபடுபவர்கள் கவனமாக இல்லாவிட்டால் ஏமாற்றப்பட வாய்ப்புள்ளது. பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. வீண் பயணங்களையும், கோபத்தில் முடிவுகள் எடுப்பதையும் தவிர்க்கவும்.

3. கும்பம்:

கும்ப ராசியினருக்கு ராகுவின் பெயர்ச்சி அதிகளவில் மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடும். எதிர்பாராத செலவுகள் அதிகரித்து பட்ஜெட்டைக் தலைகீழாக மாற்றும். தூக்கமின்மை, பதற்றம் போன்ற பிரச்சனைகள் எழலாம். சட்ட ரீதியான பிரச்சனைகளிலிருந்தும், தேவையற்ற சண்டைகளிலிருந்தும் தள்ளி இருப்பது நல்லது. அவசரமாகச் செய்யும் எந்தவொரு காரியமும் நஷ்டத்தில் முடியக்கூடும் என்பதால் கவனமுடன் செயல்பட வேண்டும்.

ராகுவின் எதிர்மறை தாக்கத்தைக் குறைக்கும் பரிகாரங்கள்:

தினமும் தவறாமல் ‘அனுமான் சாலிசா’ பாராயணம் செய்வது நன்மை தரும்.

திங்கள்கிழமைகளில் சிவன் கோவிலுக்குச் சென்று சிவலிங்கத்திற்கு நீர் மற்றும் கருப்பு எள் ஊற்றி வழிபாடு செய்யலாம்.

“ஓம் ராம் ராகவே நமஹ” என்னும் ராகு மந்திரத்தை தினமும் 108 முறை ஜபித்து வருவது தோஷங்களின் வீரியத்தைக் குறைக்கும்.