இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியைப் பத்தி வெளியில என்ன ட்ரெண்ட் ஓடிட்டு இருக்குன்னு எனக்குத் தெரியாது, ஏன்னா நான் சோசியல் மீடியாவையோ இன்ஸ்டாகிராமையோ சுத்தமா பார்க்குறதே இல்லை!” என்று இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கு முன்பாக நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் இந்திய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் திமிராகவும் அலட்சியமாகவும் பேசியிருப்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே மாபெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அயர்லாந்து தொடர் முழுவதும் 15 வயதான வைபவ் சூர்யவன்ஷிக்கு ஒரு போட்டியில் கூட வாய்ப்பு தராமல் பெஞ்சில் உட்கார வைத்தது குறித்துப் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பிய போது, உலகக் கோப்பையை வென்று கொடுத்த சீனியர் வீரர்களுக்குத்தான் தொடர்ந்து முக்கியத்துவம் தரப்படும் என ஸ்ரேயாஸ் ஐயர் திட்டவட்டமாகக் கூறினார்.

வைபவ் குறித்துப் பேசும்போது காட்டிய இந்த உச்சக்கட்ட அலட்சியத்தால் கடுப்பான ரசிகர்கள், ஸ்ரேயாஸ் ஐயருக்கு இவ்வளவு “அகங்காரமா” எனச் சோசியல் மீடியாவில் வறுத்தெடுத்து வரும் நிலையில், இன்று இரவு தொடங்கவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் வைபவ் புறக்கணிக்கப்படுவது உறுதியாகியுள்ளதால் பயிற்சியாளர் காம்பீர் மற்றும் ஐயரின் கூட்டு வியூகம் குறித்து இணையத்தில் புதிய விவாதப் புயல் வெடித்துள்ளது.

“>