மும்பையின் கோவண்டி பகுதியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போனதா? எனக் கேட்கும் அளவிற்கு மிகக் கொடூரமான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. பொதுமக்கள் அதிகம் பயணிக்கும் அரசுப் பேருந்தை ஒரு கும்பல் நடுரோட்டில் வைத்து மறித்து, ஒட்டுமொத்த சாலையையும் முடக்கியது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எவ்வித அச்சமும் இன்றி, சட்டத்தை காலடியில் போட்டு மிதிக்கும் வகையில் அந்தச் சமூக விரோதிகள் செய்த அட்டகாசத்தால், பேருந்தில் இருந்த பயணிகளும் சாலையில் சென்ற மற்ற வாகன ஓட்டிகளும் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

நாகரீகமான இந்தச் சமூகத்தில், பொதுச்சொத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு விளைவிக்கும் வகையில் இத்தகைய அராஜகச் செயல்கள் நடப்பது பெரும் கவலையை அளிப்பதாகச் சமூக ஆர்வலர்கள் கொதிக்கின்றனர்.

குறைந்தபட்ச ஒழுக்கம் கூட இல்லாமல், தங்களைச் சட்டத்திற்கு மேலானவர்களாகக் கருதிக்கொண்டு ஆடிய அந்த நபர்கள் மீது உடனடியாகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்துள்ளன.

 

இத்தகைய சம்பவங்கள் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு விடப்பட்ட பெரும் அச்சுறுத்தலாகும். கோவண்டி பகுதியில் நடந்த இந்த அராஜகம் தொடர்பான காட்சிகள் இணையத்தில் பரவி வைரலாகி வரும் நிலையில், இந்தச் சமூக விரோத கும்பலை மும்பை காவல்துறை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அரசுப் பேருந்துக்கே இந்த நிலை என்றால், சாமானிய மக்களின் பாதுகாப்பு என்ன? என்ற கேள்வி தற்போது மும்பைவாசிகள் மத்தியில் எழுந்துள்ளது.