உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ராஜ்காட் பாலத்தில் இன்று மதியம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் பெரும் பரபரப்பு நிலவியது. அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் திடீரென பாலத்தின் மீது ஏறி தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்தார்.
தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) வீரர்கள் அந்த வாலிபரிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அவர் எதற்கும் செவிசாய்க்காமல் பிடிவாதமாக இருந்தார்.
Visuals from Rajghat bridge, in Varanasi – the same bridge which features in the “Masaan” movie song “तू रेल सी गुजरती है, मैं पुल सा थरथराता हूं” pic.twitter.com/DIN2XbERM3
— Piyush Rai (@Benarasiyaa) April 10, 2026
நிலைமை மோசமாவதைக் கண்ட ஒரு மீட்புப் படை வீரர், துணிச்சலாகப் பாலத்தில் ஏறி அந்த வாலிபரை மீட்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த வாலிபர் தன்னை மீட்க வந்த வீரரின் கன்னத்தில் பளார் என அறைந்துவிட்டு, கண் இமைக்கும் நேரத்தில் கங்கை நதியில் குதித்தார்.
பாலத்தின் கீழே தயார் நிலையில் இருந்த வீரர்கள் உடனடியாக ஆற்றில் குதித்து அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், நுரையீரலில் தண்ணீர் புகுந்ததால் அந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் வாரணாசி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
