உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத், இந்திராபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் எடுக்கப்பட்ட இந்த அதிர்ச்சியான காணொளி, இணையத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி 17-ம் தேதியிடப்பட்ட அந்த வீடியோவில், ஒரு சிறிய குழந்தை மிக உயரமான கட்டிடத்தின் பால்கனி கிரில் (Balcony Grill) மீது எவ்விதப் பாதுகாப்புமின்றி ஆபத்தான முறையில் அமர்ந்துள்ளது. ஒரு சிறு தவறு நேர்ந்தால் கூட உயிர் தப்பிக்க வாய்ப்பே இல்லாத அந்த உயரத்தில், அக்குழந்தை விளையாடிக்கொண்டிருப்பது பார்ப்பவர்களின் இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்கிறது.
🚨 Shocking Negligence in a High-Rise Society | Ghaziabad
This video is from a high-rise society in the Indirapuram police station area of Ghaziabad.
The viral clip dated January 17 shows a child sitting on the balcony grill of a tall building.
This is extremely dangerous and… pic.twitter.com/Q8aCnsgaVt— The Nalanda Index (@Nalanda_index) January 23, 2026
பெற்றோர்களின் இத்தகைய அலட்சியம் கண்டிக்கத்தக்கது என்றும், குழந்தையின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் செயல்பட்ட அவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் கோரிக்கைகள் எழுந்துள்ளன. “ஒரு நொடி கவனக்குறைவு, ஒரு ஆயுள் கால சோகம்” என்பதை உணராமல், குழந்தைகளை இவ்வளவு உயரத்தில் தனியாக விடுவது மிகப்பெரிய முட்டாள்தனமாகும். சாலைப் பாதுகாப்பைப் போலவே, வீட்டின் பாதுகாப்பிலும் சமரசம் செய்யக்கூடாது என்பதை இந்த வீடியோ மீண்டும் ஒருமுறை எச்சரிக்கையாக உணர்த்தியுள்ளது.
