தனது கடின உழைப்புக்கான ஊதியம் மறுக்கப்பட்ட ஆத்திரத்தில் ஒரு தொழிலாளி, தான் செய்த வேலையையே உடைத்துச் சேதப்படுத்தும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஊதியம் வழங்கப்படாததால் ஆத்திரமடைந்த அந்தத் தொழிலாளி, ஒரு பையனுக்கு உத்தரவிட்டு, வீட்டின் உள்ளே அமைக்கப்பட்டிருந்த ‘ஃபால்ஸ் சீலிங்கை’ (False Ceiling) உடைக்கத் தொடங்குகிறார்.

அந்த வீடியோவில், “பணம் தர மாட்டார்கள், முழுச் சீலிங்கையும் உடை” என்று தொழிலாளி கோபத்துடன் கூறுவது கேட்கிறது. அந்தப் பையன் ஒரு சுத்தியலால் (Hammer) லேசாக அடித்தவுடனேயே, அலங்காரத்திற்காகப் போடப்பட்டிருந்த பிளாஸ்டர் மற்றும் போர்டுகள் உடைந்து கீழே விழத் தொடங்குகின்றன.

இந்த வீடியோவில் உள்ள உண்மைத் தன்மையை உறுதி செய்ய முடியாவிட்டாலும், தொழிலாளிக்கு ஆதரவாகப் பல நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். “ஏழைகளின் வியர்வை உழைப்பைத் திருடுவோருக்கு இப்படித்தான் பாடம் புகட்ட வேண்டும்” என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.