மும்பை உள்ளூர் ரயில்களில் (Local Train) பெண்களுக்கு எதிரான அத்துமீறல்கள் குறித்த பல சம்பவங்கள் அவ்வப்போது வெளியாகி வரும் நிலையில், தற்போது ஒரு நெகிழ வைக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இரவில் தனியாகப் பயணம் செய்த ஒரு பெண்ணுக்குப் பாதுகாப்பு அளிக்கும் விதமாக, ஒரு காவல்துறையைச் சேர்ந்த வீரர் அதே பெட்டியில் பயணித்துள்ளார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி, அந்தக் காவலருக்குப் பெரும் பாராட்டுகளைப் பெற்றுத் தந்துள்ளது.
A Mumbai policeman quietly accompanied a lone woman on a late-night train —
not to invade her space, but to ensure she felt safe.
An almost empty coach, a simple gesture, and a reminder of what real public service looks like. 🔥🙏#Mumbai #MumbaiTogether #TRAIN pic.twitter.com/DOi9IBjlUW— Armed Forces (@ForcesFan) November 18, 2025
டாக்யார்ட் ரோடு (Dockyard Road) வழித்தடத்தில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த வீடியோவில், ரயில் பெட்டி கிட்டத்தட்ட காலியாக இருந்ததையும், அந்தப் பெண் மட்டுமே தனியாகப் பயணம் செய்ததையும் காணலாம்.
எனவே, அந்தக் காவலர் அவள் அருகில் இல்லாமல் தகுந்த தூரத்தைக் கடைப்பிடித்து, பெட்டியின் மறுபுறத்தில் அமர்ந்திருந்தார். இதனால், அந்தப் பெண் பயணிக்கு அச்சமோ, அசௌகரியமோ ஏற்படாமல் அவரது பயணம் பாதுகாப்பாக அமைந்தது. காவல்துறையின் இந்த எளிய, ஆனால் பொறுப்புணர்ச்சியுள்ள செயல் சமூக வலைத்தளங்களில் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.
