ஒரு விமானப் பணிப்பெண், விமானங்களில் சில பயணிகள் பணி உறுப்பினர்களை நடத்தும் விதம் குறித்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட காணொளி ஒன்று, இந்தியாவில் நிலவும் வகுப்புப் பாகுபாடு மற்றும் பிறர் உணர்வுகளை மதிக்கும் பண்பு குறித்த தீவிரமான விவாதத்தைத் தூண்டியுள்ளது. தொழில்முனைவோர் மற்றும் பயண ஆர்வலர் பிரியேஷ் ஷர்மா என்பவர், இதுகுறித்து எக்ஸ் தளத்தில் தனது கருத்தைப் பகிர்ந்திருந்தார். “நான் இன்ஸ்டாவில் ஒரு ரீல் பார்த்தேன். அதில் ஒரு விமானப் பணிப்பெண் சில பயணிகள் தங்களை எப்படி நடத்துகிறார்கள் என்பதைப் பகிர்ந்து கொண்டார்.
Saw a reel on insta, where an airhost was sharing her experience on how some people treat them/call on flights and what’s the right way.
Her comment section was wild but the very first one itself showed the the main issue with India, humility and empathy doesn’t exist, it’s… pic.twitter.com/V34mp2icOd
— Priyesh Sharma (@Kenu73) November 10, 2025
அவரது பின்னூட்டப் பகுதி மிகவும் மோசமாக இருந்தது. அதில் முதல் கருத்தே, இந்தியாவில் உள்ள மனிதாபிமானமற்ற தன்மையைக் காட்டியது. பணம் இருந்தால் எல்லாவற்றையும் சொந்தம் கொண்டாடலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். நீங்கள் பணம் செலுத்திவிட்டீர்கள் என்பதற்காக, ஊழியர்களை அவமதிக்க உங்களுக்கு உரிமை இல்லை,” என்று அவர் குறிப்பிட்டிருந்தார். ஷர்மா இணைத்த அதிர்ச்சியூட்டும் ஸ்கிரீன்ஷாட்டில், “நீங்கள் விமானத்தின் பணியாளர் தான். எனவே நீங்கள் பயணிகளின் கோரிக்கைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும்.
நீங்கள் இலவசமாக உணவு வழங்கவில்லை. விமான நிறுவனம் உங்களுக்குச் சம்பளம் கொடுக்கிறது. மேலும், பயணி உணவுக்குப் பணம் செலுத்துகிறார். எனவே பயணிகளின் கோரிக்கைகளுக்குக் கீழ்ப்படிவதில் தவறில்லை. இதை உங்கள் குறுகிய மனதிற்குள் சரியாகப் புரிந்துகொள்ளுங்கள்” என்று எழுதப்பட்டிருந்தது. இந்த அறிக்கை பணம் படைத்தோர் அதிகாரம், வர்க்கவாதம் மற்றும் சேவைத் துறையில் பணியாளர்கள் மதிக்கப்படுவது குறித்து சமூக ஊடகங்களில் ஒரு கடுமையான விவாதத்தை மூட்டியுள்ளது.
“பணத்தால் நல்லொழுக்கத்தை வாங்க முடியாது என்பதை பெரும்பாலானோர் புரிந்துகொள்வதில்லை” என்றும், “மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிக உணர்ச்சி நுண்ணறிவுடன் இருக்கிறார்கள். இந்தியர்கள் துர்பார் மனநிலையுடன் இருக்கிறார்கள்” என்றும் சிலர் கருத்துத் தெரிவித்தனர். இருப்பினும், ஒரு சிலர், “பயணிகளுக்குச் சேவை செய்வதுதான் அந்த வேலை. எனவே ‘பணியாளர்’ என்ற வார்த்தையில் என்ன தவறு?” என்று கேள்வி எழுப்பி, பணிப்பெண்ணை விமர்சிப்பவர்களுக்கு ஆதரவாகவும் கருத்துகளைப் பதிவு செய்து, இணையத்தை இரு பிரிவாகப் பிரித்துள்ளனர்.
